இந்தியா - சீனா இடையே சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு ......
இது தொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியானிடம் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அவர் விரிவாக பதில் அளித்தார். அதன் விவரம்:
பல ஆண்டுகால பிரச்சனை..
சீனா-இந்தியா எல்லையின் மேற்குப் பகுதியில் அசல் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி.) சீன பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, சீன எல்லைப் படைகள் இந்த பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்திய படையினர் ஒருதலைபட்சமாகவும் தொடர்ச்சியாகவும் அந்த பகுதியில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற வசதிகளை கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள எல்.ஏ.சி. பகுதியில் கட்டி வந்ததாகவும், அது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் சீனா தனது ஆட்சேபங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது...



0 Comments